இன்றைய இறைவார்த்தை 22.01.2026
"நான் குழந்தையாய் இருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன்; குழந்தையின் மனநிலையைப் பெற்றிருந்தேன்; குழந்தையைப்போல எண்ணினேன். நான் பெரியவனானபோது குழந்தைக்குரியவற்றை அறவே விட்டுவிட்டேன்." 1 கொரிந்தியர் 13:11 நாம் குழந்தைகளாக இருக்கும் போது அறியாமையினால் சுயநலம், பொறாமை, சண்டை போன்ற செயல்களில் ஈடுபட்டிருந்தோம். இப்போது வளர்ந்து பெரியவர்களாக தூய ஆவியின் முதிர்ச்சியைப் பெற்று அன்பு, மன்னிப்பு, பரிவு கொண்ட கிறிஸ்தவர்களாக வாழ வேண்டும் என அப்போஸ்தலர் பவுல் அழைக்கின்றார்.